Home இலங்கை சமூகம் ஜனவரி முதல் புதிய நடைமுறை : வெளியான அறிவிப்பு

ஜனவரி முதல் புதிய நடைமுறை : வெளியான அறிவிப்பு

0

நீண்ட தூர பயணிகள் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் ஜனவரி முதல் தகுதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடிக்கடி ஏற்படும் விபத்துகள்

ஜனவரி 1, 2026 முதல் அடிப்படை சாலை தகுதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

வீதியில் ஏற்படும் விபத்து அல்லது பிற சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் சாலை தகுதிச் சான்றிதழ் அவசியம், பேருந்து உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைபரிசோதனை மையங்களில் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version