Home இலங்கை சமூகம் விபத்துக்கள் காரணமாக சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

விபத்துக்கள் காரணமாக சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு தொடர்பான விபத்து ஒன்றில் காயமடைந்த ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் விபத்துக்கள்

புது வருடப் பிறப்பின்போது பல்வேறு செயற்பாடுகளின்போது திடீர் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version