Home இலங்கை சமூகம் எரிவாயு விலை தொடர்பில் மக்களுக்கு வெளியான தகவல்

எரிவாயு விலை தொடர்பில் மக்களுக்கு வெளியான தகவல்

0

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எத மாற்றமும் இருக்காது என்று அறிவித்துள்ளன.

கடந்த மாதத்தின் விலைகள் இந்த மாதத்திற்கும் நடைமுறையில் இருக்கும் என்று லிட்ரோ தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன், செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதன் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலை

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,100 ஆகவும், 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,645 ஆகவும் உள்ளது.

NO COMMENTS

Exit mobile version