எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமே
இல்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு மாகாண மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(21.12.2025) கிளிநொச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர்
மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
அத்தோடு, எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய
மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு
மாகாணத்தில் சாதனை படைத்த 274 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா
பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் இந்த
நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை ஊக்குவிப்பதும், பொருளாதார
ரீதியில் பின்தங்கிய திறமைசாலி மாணவர்களுக்குக் கைகொடுப்பதுமே இந்தத்
திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
