Home உலகம் வடக்கு லண்டனில் கொடூரம் : தாய்,இரண்டு மகள்கள் வில்லால் தாக்கி படுகொலை

வடக்கு லண்டனில் கொடூரம் : தாய்,இரண்டு மகள்கள் வில்லால் தாக்கி படுகொலை

0

வடக்கு லண்டனில் தாய்,மற்றும் அவரது இரண்டு மகள்கள் வில்லால் தாக்கி படுகொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிபிசி விளையாட்டு வர்ணனையாளரான ஜோன் ஹன்ட்டின் மனைவி கரோல் ஹன்ட், 61, மற்றும் மகள்களான ஹன்னா ஹன்ட், 28,லூயிஸ் ஹன்ட், 25, ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.

ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள அவர்களது வீட்டிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை நடத்தியவர் கைது

இந்த தாக்குதலை நடத்தியவர் 26 வயதான கைல் கிளிஃபோர்ட், எனவும் அவர் மயானத்தில் காயங்களுடன் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தை விட்டு வெளியேறிய சந்தேக நபர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை

கைது செய்யப்பட்ட நிலையில் காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் அதிகாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Source: https://ibctamil.com/article/north-london-three-womenare-murdered-1720689847

NO COMMENTS

Exit mobile version