Home இலங்கை சமூகம் மோசமான வானிலை! தூய்மை செய்யும் பணியில் நுவரெலியா பொலிஸார்

மோசமான வானிலை! தூய்மை செய்யும் பணியில் நுவரெலியா பொலிஸார்

0

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையை தொடர்ந்து பொதுமக்கள்
அதிகம் கூடும் நகர் பகுதிகளை
தூய்மை செய்யும் பணியில் நுவரெலியா பொலிஸார் களமிறங்கியுள்ளனர்.

இதன்படி நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடம் மோசமான வானிலையால் முழுமையாக
வெள்ளத்தில் மூழ்கியது.

தீயணைப்பு பிரிவினருடன் சேர்ந்து தூய்மை பணி

இதனை தொடர்ந்து நேற்று (03) இரவு நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி
தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் இணைந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு
பிரிவினருடன் சேர்ந்து பேருந்து தரிப்பிட முழு வளாகத்தை சுற்றிலும் தூய்மை
பணியினை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version