கரந்தெனிய – திவியகஹவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு
அத்துடன் குறித்த நபரை கொலை செய்துவிட்டு, சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலதிக தகவல்- ராகேஷ்
