எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
தெமோதரை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், நேற்று மாலை எல்ல 9 வளைவு பாலத்தின் தெமோதரை – எல்ல ரயில் மார்க்கத்தில்
நடந்து சென்றுகொண்டிருந்த போது கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இவர் பாலத்தில் இருந்து கீழே குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது
தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
