Home சினிமா சீதாவை விவாகரத்து செய்தபின் மறுமணம் செய்யாதது ஏன்?- ஓபனாக பேசிய பார்த்திபன்

சீதாவை விவாகரத்து செய்தபின் மறுமணம் செய்யாதது ஏன்?- ஓபனாக பேசிய பார்த்திபன்

0

பார்த்திபன்

எப்போதும், எதிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைக்கும் பிரபலங்களில் முக்கியமானவர் பார்த்திபன்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய இவர் வித்தியாசமான படைப்புகளுக்கு எப்போதும் பெயர் பெற்றவராக உள்ளார்.

இயக்குனர் என்பதை தாண்டி நடிகராக தன்னை இப்போதெல்லாம் நிரூபித்து வருகிறார்.

மறுமணம்

பார்த்திபன் கடந்த 1990ம் ஆண்டு நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள், இவர்களுக்கு கீர்த்தனா, ராக்கி மற்றும் அபிநயா என 33 குழந்தைகள் உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2001ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

மறுமணம் செய்யாதது குறித்து பார்த்திபன் கூறுகையில், சீதாவிற்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை என்பதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

Source: https://cineulagam.com/article/parthiban-opens-up-about-his-second-marriage-1742646009

NO COMMENTS

Exit mobile version