Courtesy: தவசீலன்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுதலைப்பெற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முள்ளிவாய்க்கால்
தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு வருகைத்தந்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால்
தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு சென்று நினைவேந்தலை முன்னெடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக நிலம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொது அமைப்புக்கள், அரசியல் ஆதரவாளர்கள், பல்கலை மாணவர்களால்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் – தவசீலன்
படங்கள் – குமணன்(நன்றி)
