கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக. இன்று சோதனையிடப்பட்டது.
மேலதிக விசாரணை
இதன்போது, 05 கிராமம் 720 மில்லி கிராம் ஐஸ்
போதை பொருளை சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
அத்துடன் தடையப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.