பளை பகுதியிலுள்ள வீடொன்றில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (17) நள்ளிரவு கிளிநொச்சி- பளை, தம்பகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஐயாத்துரை சிவனேசன்
என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை
ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள்
தெரிவித்துள்ளனர்.
குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள்
தீக்கிரையாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
