குழந்தைகள் ஓய்வெடுக்கவும், தங்களது பாடசாலை விடுமுறைகளை மகிழ்ச்சியாகக் கழிக்கவும் போதுமான நேரத்தை வழங்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கேட்டக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குழந்தைகளின் மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, விடுமுறை நாட்களில் அவர்கள் மீது அதிகப்படியான கல்வி சார்ந்த கோரிக்கைகளை வைப்பதற்கு எதிராகவும் எச்சரித்தார்.
மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டவரும் நடவடிக்கை
குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி சீர்திருத்தங்கள், பள்ளிப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் மாணவர்களுக்கான உளவியல் சமூக ஆதரவு ஆகியவற்றில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening
Source: https://ibctamil.com/article/pm-urges-parents-teachers-children-enjoyl-holidays-1787227428
