இலங்கை பொலிஸ் துறைக்கு 75000 புதிய சுவாசப் பகுப்பாய்வு கருவிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் துறை அத்தியட்சகருமான எஃப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவை தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோதனை
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வீதி விபத்து விசாரணையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் நிலவிய சுவாசப் பகுப்பாய்வு கருவிகளுக்கான தட்டுப்பாடு இந்த புதிய தொகுதியின் மூலம் நீங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
