Home இலங்கை சமூகம் தம்பலகாமத்தில் வடக்கு, கிழக்கு பருவ பெயர்ச்சி மழை தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்

தம்பலகாமத்தில் வடக்கு, கிழக்கு பருவ பெயர்ச்சி மழை தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்

0

வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த குழு கூட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய ஒருங்கமைப்பில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று (29.10.2024) நடைபெற்றது. 

வடிகான் பிரச்சினைகள்

குறித்த கூட்டத்தில் மழை காலங்களில் வெள்ள அனர்த்தம் ஊடாக ஏற்படும் கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து அடையாளப்படுத்தப்பட்ட பல வடிகான் பிரச்சினைகள், நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் முன் ஆயத்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், முள்ளிப்பொத்தானை இராணுவ முகாம் அதிகாரி,  காவல் நிலைய பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/preliminary-committee-meeting-in-trincomalee-1-1730243615

NO COMMENTS

Exit mobile version