புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake )தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவொன்றை இடுவதன் மூலம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புனித பாப்பரசர்
அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
It is with deep sorrow that I extend my heartfelt condolences on the passing of His Holiness @Pontifex, on behalf of the people of Sri Lanka. His unwavering commitment to peace, compassion and humanity has left an indelible mark on the world.
May his legacy of compassion,…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) April 21, 2025
அவரது கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
