உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது.
மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தங்க நகைகளின் விலை
ஒரு பவுண் எடையுள்ள ஒரு சாதாரண தங்க நெக்லஸின் விலை ரூ. 325,000 லிருந்து சுமார் ரூ. 345,000 ஆகவும், ஒரு பவுண் எடையுள்ள திருமண தங்க நெக்லஸின் விலை ரூ. 380,000 லிருந்து சுமார் ரூ. 400,000 ஆகவும், ஒரு மோதிரத்தின் விலை ரூ. 360,000 லிருந்து சுமார் ரூ. 380,000 ஆகவும் அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரு பவுண் எடையுள்ள சராசரி மோதிரத்தின் விலை சுமார் ரூ. 340,000 லிருந்து சுமார் ரூ. 360,000 ஆகவும், திருமண மோதிரத்தின் விலை சுமார் ரூ. 100,000 ஆகவும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
24 கரட் பவுண் ஒன்றின் விலை தற்போது ரூ. 354,000 ஆகவும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை ரூ. 327,500 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சந்தையில் தங்க இருப்பு குவிப்பு
அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே போர் வெடிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
போர் வெடித்து பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் என்ற அடிப்படையில் உலக சந்தையில் தங்க இருப்பு குவிவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
