Home இலங்கை குற்றம் பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மர்ம மரணம்

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மர்ம மரணம்

0

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சந்தேகத்துக்கிடமான
முறையில் மரணித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (26.06.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சிறைக்கூண்டினுள்
இருந்து தூக்கிட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டதையடுத்து
கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கைதியே உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version