Home இலங்கை சமூகம் யாழில் வீட்டிற்கு அஸ்திவாரம் வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வீட்டிற்கு அஸ்திவாரம் வெட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில்
நேற்றையதினம் (18)  வெடிக்காத நிலையில் வெடிகுண்டு
ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அஸ்திவாரம் வெட்டிக்
கொண்டிருந்த போது மண்ணில் புதைந்திருந்த நிலையில் எறிகணை ஒன்றினை கண்டுள்ளனர்.

எறிகணை மீட்பு

இந்நிலையில் உடனடியாக கட்டுமான வேலைகளை நிறுத்திவிட்டு சம்பவம் தொடர்பாக
மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் குறித்த
வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர்.

இது யுத்த காலத்தில் ஏவப்பட்ட எறிகணையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version