Home இலங்கை சமூகம் கடைகளை மூடுமாறு மிரட்டிய மட்டக்களப்பு மாநகர முதல்வரால் குழப்பம்

கடைகளை மூடுமாறு மிரட்டிய மட்டக்களப்பு மாநகர முதல்வரால் குழப்பம்

0

இலங்கை தமிழரசு கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடைடைப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்காத கடைகளுக்கு சென்று மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மிரட்டியுள்ளார்.

அவர் கடை உரிமையாளர்களை கடைகளை மூடுமாறு வற்புறுத்தி அவ்வாறு செய்யாவிட்டால், கடைகளுக்கான அனுமதிபத்திரங்களை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.

இதன்காரணமாக விசனமடைந்துள்ள மக்கள், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்து காவல்துறையிலும் முறைப்பாடு அளித்து மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

https://www.youtube.com/embed/-vrfMp3B0IQ

NO COMMENTS

Exit mobile version