Home இலங்கை சமூகம் சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்

சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்

0

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சர்வதேச நீதிப்பொறிமுறையை
வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (26-07-2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்

இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலைகள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், சர்வதேச
நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி இந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version