Home இலங்கை சமூகம் மன்னாரில் 15 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மன்னாரில் 15 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

0

மன்னாரில் (Mannar) காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு
ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் (17) மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் குறித்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற
போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை வழங்குகின்றனர்.

கறுப்பு பட்டி அணிந்து போராட்டம் 

மேலும் இந்தப் போராட்டத்தில் மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் பங்கேற்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கறுப்பு பட்டி அணிந்துள்ளதுடன்  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தில் தமிழ், முஸ்லிம்
மக்களும் மத தலைவர்களும், அருட் சகோதரிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.

அத்துடன் மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல்
மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம்
தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version