Home இலங்கை சமூகம் சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

0

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அந்த மாவட்ட த்திற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்திற்கு முன்பாக A9 வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (30) காலை10மணி முதல் அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நீதி

சர்வதேச நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி தேவை, பொது வேட்பாளராக சரியான ஒருவரை நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version