பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு நாளை (29.10.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பயணம் மேற்கொண்டு ஒன்றரை நாட்களுக்குள் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் அரசு பணத்தை வீணடித்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையான இரவில் நீதிமன்ற அறையில் நடந்த நிகழ்வுகளை படமாக்கி சமூக ஊடகங்களில் பரப்பிய நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்திற்குச் செல்லும் பாதைகளைத் தடுக்கக் கூடியிருந்த மக்கள் யார் என்பதை விசாரித்து, அவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு முன்னாள் நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
