Home இலங்கை கல்வி நீதித்துறையில் 2600 பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு – உடனடி நியமனம் அறிவிப்பு

நீதித்துறையில் 2600 பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு – உடனடி நியமனம் அறிவிப்பு

0

இலங்கையின் நீதித்துறையில் தற்போதைக்கு 2,600-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சின் ஆலோசனைக் குழு மூலம் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மேற்குறித்த ஆலோசனைக்குழுவின் கூட்டத்தின்போது, நீதித்துறை அதிகாரிகள் இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

உடனடி நியமனம்

கடந்த ​​2018ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதித்துறையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படாமை காரணமாகவே தற்போது 2,647 பதவி வெற்றிடங்கள் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சம்பந்தப்பட்ட பதவி வெற்றிடங்களை உடனடியாக நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  

Source: https://tamilwin.com/article/recruitment-for-2600-posts-in-judicial-department-1780148450

NO COMMENTS

Exit mobile version