Home இலங்கை பொருளாதாரம் வாகன கொள்வனவாளர்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ள தனியார் நிறுவனம்

வாகன கொள்வனவாளர்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ள தனியார் நிறுவனம்

0

Courtesy: Sivaa Mayuri

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டவுடன் புதிய வாகனங்களை கொள்வனவு ஆர்வமுள்ளவர்களை பதிவு செய்வதற்கு முன்னணி தனியார் நிறுவனம் ஒன்று செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட், 2025 டொயோட்டா புத்தம் புதிய வரிசையின் அறிமுகமாக பதிவுகளை ஆரம்பித்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய வாகனங்கள்

புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய ஆர்வமுள்ளவர்களை முன்பதிவு செய்வதற்கும், இறக்குமதி தடை நீக்கப்படும் போது முன்னுரிமை பெறுவதற்கும் தமது நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாக அவரை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சம்மேளனமும், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://tamilwin.com/article/register-vehicle-buyers-sri-lanka-1733157546

NO COMMENTS

Exit mobile version