தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இளைஞர் சேவைகள் மன்றத்தை அரசியல்மயப்படுத்தி இளைஞர்கள் மத்தியில் பகைமை உணர்வைத் தூண்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை இளம் தலைமுறையின் மனஅழுத்தங்களைக் குறைத்து அவர்களை சமூகமயப்படுத்தி தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இதுவரை காலமும் அரசியல் சார்பு இன்றி இயங்கி வந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
ஆனால் தற்போதைக்கு பதவிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இளைஞர் சம்மேளனங்களில் தங்கள் கட்சியின் ஆதரவாளர்களை நியமித்துக் கொள்வது மட்டுமன்றி தங்களுக்கு எதிரானவர்களை இளைஞர் சம்மேளனங்களில் இருந்து விரட்டியடிப்பதிலும் மும்முரமாக செயற்படுகின்றது.
அத்துடன் இளைஞர்கள் மத்தியில் பகைமை உணர்வைத்தூண்டும் வகையில் அரசாங்கமும் முக்கியஸ்தர்களும் செயற்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கீத் கயான், தேசிய சம்மேளன அங்கத்தவர் இமந்த பிரசாத் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
