காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள் குறித்து தகவல்கள் தெரிந்தால், அவை தொடர்பில் விரைவில் பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதன்படி, 119 அல்லது 1997 என்ற எண்ணை அழைத்து இந்தத் தகவலை வழங்க முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
அவசர தொலைபேசி இலக்கம்
இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, உங்கள் அன்புக்குரியவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சமூக பொறுப்புடன் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

