Home இலங்கை சமூகம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த பெருமளவு இலாபம்

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த பெருமளவு இலாபம்

0

 இலங்கை மின்சார சபை இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 119.20 பில்லியன் ரூபாய் (11,920 கோடி) இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் பெற்ற 20.65 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 34.53 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார சபையின் நிதி அறிக்கைகள் 

இது 67.2 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மின்சார சபையின் நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

Source: https://tamilwin.com/article/revenue-of-119-billion-rupees-electricity-board-1724160306

NO COMMENTS

Exit mobile version