Home இலங்கை சமூகம் காலி கடலில் மூழ்கிய ரஷ்ய தம்பதி: பொலிஸாரின் துணிச்சலான செயல்

காலி கடலில் மூழ்கிய ரஷ்ய தம்பதி: பொலிஸாரின் துணிச்சலான செயல்

0

காலி (Galle) – அஹுங்கல்ல கடற்கரையில் நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதி ஒன்றை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (25.01.2025) இடம்பெற்றுள்ளது. 

வலுவான அலை 

குறித்த பகுதியில் ரஷ்யாவை சேர்ந்த 51 வயது ஆணும் 46 வயது பெண்ணும் கடலில் நீந்திக் கொண்டிருந்த வேளை பலமான அலையில் சிக்கியுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் அதிகாரி மனோஜ் அரியரத்னா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சங்கீத் மற்றும் துலாஞ்சயா இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் உட்பட நீச்சல் வீரர்கள் வலுவான நீரோட்டம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version