Home இந்தியா சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது!

சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது!

0

சபரிமலை தங்​கம் திருட்டு வழக்​கில் சென்னையைச் சேர்ந்த தொழில​திபர் உட்பட இரண்டு பேர் கைது செய்​யப்​பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவின் சபரிமலை ஐயப்​பன் ஆலயத்தில் துவார பால​கர் சிலைகளின் தங்க கவசம் மற்​றும் கதவு நிலைகளில் பதிக்​கப்​பட்​டிருந்த தங்க தகடு ஆகியவை திருடப்​பட்டுள்​ளன.

இது தொடர்​பாக இந்திய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த வழக்​கில் திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்ட் முன்​னாள் தலை​வர் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

வழக்கு விசா​ரணை

இந்த வழக்கு விசா​ரணை​யின் ​போது சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்​னையை சேர்ந்த பிரபல நிறு​வனத்தின் தலைமை செயல் அதி​காரி பங்​கஜ் பண்​டாரி நேற்று (19.12.2025) கைது செய்​யப்​பட்டார்.

துவார பால​கர் சிலைகளில் இருந்து திருடப்​பட்ட தங்​கத்தை கர்​நாட​கா​வின் பெல்​லாரியை சேர்ந்த தங்க ஆபரண கடை உரிமை​யாளர் கோவர்​தன் வாங்​கிய​தாக குற்​றம் சாட்​டப்​பட்டுள்​ளதுடன் அவரும் கைது செய்​யப்​பட்டுள்​ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் அதிகாாிகள் திரு​வனந்​த​புரத்​துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்​பன் கோயில் தங்​கம் திருட்டு தொடர்​பாக அமலாக்​கத் துறை தனி​யாக விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இந்த விசா​ரணைக்கு தடை விதிக்​கக் கோரி விசேட புல​னாய்வு குழு சார்​பில் கேரள உயர்நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​ட நிலையில் இந்த ​வழக்​கில் நேற்று (19.12.2025) முக்​கிய உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version