Home இலங்கை சமூகம் ஜப்பானுடனான ராஜதந்திர உறவு: எதிர்க்கட்சி தலைவர்வலியுறுத்து

ஜப்பானுடனான ராஜதந்திர உறவு: எதிர்க்கட்சி தலைவர்வலியுறுத்து

0

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவை தொடர்ந்தும் கட்டியெழுப்புவதில் எதிர்க்கட்சி முடிந்தளவான பங்களிப்பை வழங்கும் என்று சஜித் பிரேமதாச(Sajith Premadasa) உறுதியளித்துள்ளார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Isomata Akio) இடையிலான சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (01) கொழும்பில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் இராஜதந்திர உறவை தொடர்ந்தும் பேணுமாறும், இதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை பெற்றுத் தருவதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பான் தூதுவரிடம் தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்கள்

அவ்வாறே, கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் முன்னெடுத்து வரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறும், இதற்குத் தேவையான பூரண ஆதரவை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தாம் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் காவிந்த ஜயவர்தனவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்

NO COMMENTS

Exit mobile version