எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவருமான சஜித்
பிரேமதாச, லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
முறைப்பாடு
இதற்கான அழைப்பாணை, ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்
நடைபெற்று வரும் விசாரணையுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தா தலைமையகத்தின் அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு
அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
