Home சினிமா ‘இதனால் தான் என் கண்களில் கண்ணீர் வருகிறது’.. வெளிப்படையாக பேசிய நடிகை சமந்தா

‘இதனால் தான் என் கண்களில் கண்ணீர் வருகிறது’.. வெளிப்படையாக பேசிய நடிகை சமந்தா

0

சமந்தா

நடிகை சமந்தா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது. இந்த வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றாலும், சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். ஆக்ஷன் ஹீரோயினாக இதில் கலக்கியிருந்தார்.

நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, படங்கள் எதுவும் கமிட் செய்யாமல் இருந்தார். ஆனால், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர், விரைவில் மிகப்பெரிய படங்களுடன் கம் பேக் கொடுக்கவுள்ளார். இதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகை சமந்தா தற்போது சுபம் என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், மேடையில் அவ்வப்போது கண்கலங்குவது ஏன் என்பது குறித்து சமந்தா வெளிப்படையாக பேசியுள்ளார்.

சமந்தா ஓப்பன் டாக்

இதில் “நான் மேடையில் கண்கலங்கி கண்களை துடைப்பதற்கு காரணம் எமோஷனலாக இருப்பது அல்ல, எனது கண்கள் அதிகமான வெளிச்சத்தை பார்த்தால் சென்சிட்டிவ் ஆகி கண்ணீர் வந்துவிடும். அதனால்தான் என் கண்களில் கண்ணீர் வருகின்றது. மற்றபடி நான் எதற்கும் எமோஷனல் ஆகவில்லை. நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றேன்” என பேசியுள்ளார். 

Source: https://cineulagam.com/article/samantha-about-why-her-eyes-causing-water-easily-1746522116

NO COMMENTS

Exit mobile version