Home இலங்கை கல்வி மாணவர்களுக்கான சீருடை துணி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான சீருடை துணி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 மாணவர்களுக்கான கவுண்களும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சீருடைகள் மற்றும் அங்கிகள் விநியோகிக்கப்படவுள்ளது.

சீன அரசாங்கம் வழங்கும் மானியம்

கல்வி அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் சீன(china) அரசாங்கம் மானியமாக சீருடை துணிகளை வழங்கவுள்ளது.

சீருடைகளின் தொகுதி 

இந்த அறிவிப்பின்படி, 100% சீருடைகள் இலவசமாகக் கிடைக்கும், அத்துடன் அரசால் 7,000 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும்.

இந்த சீருடைகளின் முதல் தொகுதி நவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20ஆம் திகதியும் இலங்கைக்கு(sri lanka) வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version