ஏகவள்ளி
அபூர்வ ராகம், தென்றல், கேளடி கண்மணி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஏகவள்ளி.
இவரது சகோதரி யமுனாவும் சின்னத்திரை நடிகை தான், சன், விஜய், ஜெயா டிவி என இவரும் பல தொடர்களில் நடித்துள்ளார்.
ஏகவள்ளி தனது காதலருக்காக மதம் மாறிவிட்டார் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் சீரியல் நடிகர் பெரோஸ் கானை திருமணமும் செய்தார்.
குழந்தை
திருமணம் செய்து சந்தோஷமாக வாழும் பெரோஸ் கான் மற்றும் ஏகவள்ளி சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்கள். இந்த நிலையில் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.
இதனை பெரோஸ் கான் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கூறியுள்ளார். அம்மா-அப்பா ஆகியிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Source: https://cineulagam.com/article/serial-actor-feroz-khan-blessed-with-baby-1738045096
