பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது இன்று(7) இரவு பொரளை- சஹஸ்ரபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி குறித்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
