Home இலங்கை சமூகம் அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை:அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை:அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

பண்டிகை காலத்தில் நாட்டினுள் அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரிசி இறக்குமதி

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நெல்லுக்கான தட்டுப்பாடு இல்லை.

எனவே, எவ்வாறு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும்.

விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் நெல்லுக்கான நிர்ணய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அரசாங்கம் என்ற வகையில் அரிசியை இறக்குமதி செய்யவும் தயாராக இருப்பதாக வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version