சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு – ஆனந்தி ஒன்று சேர்வார்களா இல்லையா என்பது தான் தற்போது எல்லோரது கேள்வியாக இருந்து வருகிறது.
அன்பு ஒரு பக்கம் ஆனந்தி வந்தால் தான் சாப்பிடுவேன் என உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வீட்டை விட்டு அனுப்பிய அம்மாவும் மனம் மாறாமல் தான் இருக்கிறார்.
அதே நேரத்தில் ஆனந்தி மனம் மாறுவது போல கொஞ்சம் தெரிந்தாலும் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஆனந்தியை அன்பு விஷயத்தில் மற்றவர்கள் கட்டாயப்படுத்தி வரும் நிலையில், தான் இல்லாமலேயே ஆகிவிடபோவதாக சொல்கிறார்.
