Home சினிமா அருண் முத்து மீது சொன்ன பொய்யை நம்பி சண்டை போடும் சீதா… சிறகடிக்க ஆசை புரொமோ

அருண் முத்து மீது சொன்ன பொய்யை நம்பி சண்டை போடும் சீதா… சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ஆரம்பமே மனோஜின் நாய்க்கடி கலாட்டாவுடன் எபிசோட் நகர்கிறது.

நாய் உரிமையாளர் காணாமல் போனது என்று சொன்னதை அது உயிரிழந்துவிட்டது என புரிந்துகொண்டு மனோஜ் வீட்டையே ஒரு கலாட்டா செய்கிறார்.

பின் முத்து மீண்டும் நாய் ஓனருக்கு போன் செய்தபோது நாய் காணாமல் போனது இப்போது வந்துவிட்டது என்கிறார்.

அடுத்து ரோஹினி க்ரிஷ் அடம் பிடிக்கிறார் என போன் வர தனது தோழி வீட்டிற்கு அழைத்து வர செல்கிறார். அப்போது மீனா, க்ரிஷை பார்த்துவிட்டு துரத்த அவர் மிஸ் செய்துவிடுகிறார்.

இன்னொரு பக்கம் அருண் பைக்கில் 3 பேராக பயணித்தவர்களை அடிக்க அவர்கள் இவரை பிடித்து தாக்கிக் கொண்டிருக்க அங்கு வந்த முத்து காப்பாற்றுகிறார்.

புரொமோ

ஆனால் அருண் வழக்கம் போல் நடந்த உண்மையை கூறாமல் முத்து தவறு செய்தது போல் சீதாவிடம் கூறுகிறார்.

அதனை சீதா நம்பிவிட்டதாக தெரிகிறது, தனது அக்காவிற்கு போன் செய்து அம்மா வீட்டிற்கு வர பேச வேண்டும் என கோபமாக கூறுகிறார். 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-aug-28-episode-promo-1756266549

NO COMMENTS

Exit mobile version