கொழும்பிலிருந்து(colombo) மஸ்கெலியாவுக்குச்(Maskeliya) சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து(sltb) இன்று(02) காலை 8:30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வட்டவளையிலிருந்து தியகல நோர்டன்பிரிட்ஜ் வழியாக மஸ்கெலியாவுக்குப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
பேருந்து செங்குத்தான சரிவில் விபத்து
பேருந்து செங்குத்தான சரிவில் விபத்துக்குள்ளானது,மேலும் விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பேர் பயணித்ததாக நோர்டன்பிரிட்ஜ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக சாலையில் கனரக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது.
