Home இலங்கை சமூகம் தொடருந்து சேவையை மேம்படுத்த விசேட கவனம் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தொடருந்து சேவையை மேம்படுத்த விசேட கவனம் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க

0

தொடருந்து ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

நேற்று (12.12.2024) மருதானை தொடருந்து நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடருந்து தலைமையகத்தில் (department of railways) தொடருந்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

தொடருந்து தாமதம்

தொடருந்து திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், தொடருந்து தாமதம் மற்றும் தொடருந்து கோளாறுகளை தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகத்தின் கிழக்கு முனையம்

தொடருந்து சேவையை அபிவிருத்தி செய்வதற்கு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று கொழும்பு துறைமுகத்தில் விசேட கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதிக்குள் தயார் செய்து முடிக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version