நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறையினருக்கு(Sri lanka police அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிக்க இந்த விசேட எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்கள்
காவல்துறையினருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும் திருப்பி அனுப்பப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே இருப்பதால் இந்த தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தகவல் அளிப்பவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் காவல்துறையினருக்கு தகவல்களை வழங்குவதற்காக, காவல்துறை 1997 என்ற குறுகிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது