Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட திட்டம் – செய்திகளின் தொகுப்பு

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட திட்டம் – செய்திகளின் தொகுப்பு

0

2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச
பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான
தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை
அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகை பதினைந்து இலட்சம் ரூபாவாக
அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை

வங்கி
மேற்கொண்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் மூன்று முறை சித்தியடைந்த மாணவர்களுக்கு
மாத்திரமே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..


Source: https://tamilwin.com/article/special-scheme-students-higher-level-examinations-1717826824

NO COMMENTS

Exit mobile version