Home இலங்கை சமூகம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொள்ளும் நாடுகள் : முன்னணியில் இலங்கை

தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொள்ளும் நாடுகள் : முன்னணியில் இலங்கை

0

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை (Sri Lanka) இன்னும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்படி 1996-1997 ஆம் ஆண்டுகளில் உலகில் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்ற நாடாக இலங்கை பதிவாகி இருந்தது.

சுகாதார அமைச்சு

தற்போது அந்த நிலைமை மேம்பட்டுள்ள போதிலும், நாடு இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை.

குறிப்பாக தானே தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு தூண்டுகின்ற காரணிகள் பல உள்ளன. அந்த சூழ்நிலைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த நிலைமையை மேம்படுத்த சுகாதார அமைச்சு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்“ என தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/sri-lanka-leads-the-list-of-suicides-1720781181

NO COMMENTS

Exit mobile version