Home முக்கியச் செய்திகள் மக்களின் வங்கி கணக்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மக்களின் வங்கி கணக்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0

நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில், வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சுமார் மூன்று கோடியே நாற்பது இலட்சம் வங்கி கணக்குகளில் ஐயாயிரம் ரூபாவிலும் குறைந்த தொகையே வைப்பு நிலுவையாக காணப்படுகின்றது.

வைப்புத் தொகை

நாட்டின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இருபது இலட்சம் என்ற போதிலும் வங்கிகளின் வைப்புத் தொகை ஐந்து கோடியே எழுபது லட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வரவுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்! வெளியானது தகவல்

வங்கிகளில் அறவிட முடியாக் கடன் தொகை 4 முதல் 5 வீதமாக காணப்படும் என்ற போதிலும் தற்பொழுது அந்த தொகை 13 வீதமாக அதிகரித்துள்ளது.

கடன் செலுத்துகையை மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் சொத்துக்களை கைப்பற்றும் சட்டமான பாராடே சட்டம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், வங்கிகள் நீதிமன்றின் உதவியுடன் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் வீசப்போகும் வெப்ப அலை! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version