Home இலங்கை சமூகம் டித்வா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டித்வா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

இலங்கையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) இன்று (14) காலை 06 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும், 184 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் 25 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேரிடரால் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 23,041 குடும்பங்களைச் சேர்ந்த 72,911 பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த அனர்த்தத்தால் 6,164 வீடுகள் முழுமையாகவும் 112,110 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version