இலங்கையில் கல்வித்துறையில் சீர்திருத்தம் அவசியம் என்பதை பல கல்வியலாளர்கள் கடந்த பல காலமாக முன்வைத்த வண்ணம் இருந்தனர்.
அந்தவகையில் உலக நவீனமயமாக்கலுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் கல்வி சீர்திருத்தத்தில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2026 முதல் இலங்கையில் புதிய கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த கல்விச் சீர்திருத்தம் மாணவர்களின் கல்விச் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டாலும் இன்னுமொரு சாரார் குறித்த கல்வி மறுசீரமைப்பானது மாணவர்களுக்கு ஆபத்தாகும் என குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எம். கணேசமூர்த்தி லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இது தொடர்பில் நேரலையாக விளக்கமளித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்…
Source: https://tamilwin.com/article/sri-lanka-students-in-new-education-system-1754235839
