இந்தியாவில் இலங்கை கடற்றொழிலாளர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்றொழிலாளர் ஒருவரை கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற, காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ளன.
இவ்விடயம் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
Source: https://tamilwin.com/article/sri-lankan-fisherman-attacked-in-tamil-nadu-1777486107
