Home இலங்கை ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவருக்கு நேர்ந்த கதி

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவருக்கு நேர்ந்த கதி

0

இஸ்ரேல் (Israel) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை (Sri Lanka) செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த தாக்குதலில் இரோஷிகா சதுரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதரகக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிமல் பண்டார தெரிவித்தார். 

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த செவிலியர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு சேவைக்காக சென்றுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் என்பது தொடர்ந்து 06வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version